முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரவேண்டும்!துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரவேண்டும் என்று  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனத்திற்கு சென்றார்.பின்னர் அவர் கூறுகையில்,தான் குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும். தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது, இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment