“மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட”உ.பி முதல்வருக்கு கண்டனம்..!!

மும்பை;
பிரதமர் மோடியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச ‘சாமியார்’ முதல்வர் ஆதித்யநாத் பேசியது தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.குறிப்பாக, அவரது பேச்சை சிவசேனா கடுமையாக கண்டித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “17-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த சிவாஜி மகாராஜா எந்த அரசியல் கலவரங்களிலும் ஈடுபட்டதில்லை” என்று கூறி மோடியையும், ஆதித்யநாத்தை சாடியுள்ளார்.

மேலும், ரபேல் விவகாரத்தில், மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று மடங்கு அதிகவிலை கொடுத்து போர் விமானங்களை வாங்கியது பற்றி பிரதமர் மோடி நிச்சயம் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment