“ஹோட்டல் சரவணபவன்” உரிமையாளர் ராஜகோபாலின் உடல்நிலை என்ன – உயர்நீதிமன்றம் விசாரணை !

ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவு இட வேண்டும் என்று ராஜகோபாலனின் மகன் சரவணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கின் விசாரணையில் அவரது உடல் நிலைமை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

 

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் கடந்த 9 ம் தேதி ராஜகோபால் ஆஜரானார். நரம்புத்தளர்ச்சி நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அதன் பின் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, வெண்டிலெட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்து வருகிறது.

தற்போது, ராஜகோபாலனின் மகன் சரவணன் தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை அளிக்க உத்தரவு இட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று நடந்த வழக்கின் விசாரணையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமணிய் நிர்வாகம் ராஜகோபால் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் கூறியுள்ளார்.