என்னடா இது! ஒரு ரூபாய்க்கு பரோட்டா, பத்து ரூபாய்க்கு பிரியாணியா??

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் புதிதாய் ஒரு உணவகம் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, புரோட்டா ஒன்றுக்கு ரூபாய் ஒன்றும், பிரியாணி ஒரு பிளேட்டுக்கு ரூபாய் பத்துக்கும் விற்பனை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இந்த தகவல் பரவி, அணைத்து மக்களும் அந்த கடைக்கு விரைந்தனர். கூட்டம் அலைமோதியதால், அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அதனை ஒழுங்குபடுத்தினர்.