நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவை அழிப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசியை தற்பொழுது நம்பியுள்ளனர். எனவே, பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்பொழுது மிகக் குறைவான இடங்களில் தான் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களும் கொரோனாவால் பாதிப்படைவதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.
இந்த ஆய்வின் பின் எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 டேஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 நோயாளிகள் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 நோயாளிகள் என மொத்தம் 63 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், மீதமுள்ள 53 பேர் கோவாக்சின் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள். தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பின் அளவும், 5 முதல் 7 நாட்கள் வரை இந்த நோயாளிகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தடுப்பூசி போட்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை போலவே தொற்றின் தாக்கம் இருந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் கொரோனாவை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால், மற்ற நோயாளிகளைப் போல உடல் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…