எனக்கு எதற்கு விளம்பரம்?- முதலமைச்சர் ஸ்டாலின்

எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என முதல்வர் கேள்வி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், அமைச்சர் காந்தி அவர்களை புகழ்ந்து பேசினார். அப்போது  ராணிப்பேட்டை என்பதை விட காந்தி பேட்டை என்று சொன்னால் கூட பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அமைச்சர் காந்தி எப்போதும் தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் செய்து முடிக்கப்பட்ட  நிறைவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டு கூறினார். தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய 70 முதல் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தான் மக்கள் முன்பு கம்பீரமாக நின்று பேசிக்கொண்டே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருந்துவிடும் என்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். ஸ்டாலின் விளம்பர பிரியராக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என கேள்வி எழுப்பிவுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

16 mins ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

45 mins ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

1 hour ago

மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!

Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…

2 hours ago

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…

2 hours ago

என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

2 hours ago