என்ன பாலா ஒரே நாள்ல நல்லவனாகிட்டிங்க போல!

நேற்று கமல் பேசிய வார்த்தையில் பாலா ஒரே நாளில் நல்லவர் ஆகி விட்டார் போல, இன்று நான் கோபப்பட மாட்டேன் என கேமரா முன்பு கூறுகிறார்.

90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இறுதியாக பைனல் சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொடுக்கக்கூடிய டிக்கெட் டூ ஃபினலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற கூடிய போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்.

அதில் நேற்று பாலா ஒரு விளையாட்டில் முதல் இடத்தைப் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டில் ஆரி விளையாடுவதற்கு இடையூறாக பாலா சில காரியங்களைச் செய்தார். அதற்கு ஆரி பாலாவைப் பார்த்து நீ ஆம்பள பையன் தானே ஓடலாம் அல்லவா எனக் கூறியிருந்தார். எனவே இன்று  கேமரா முன்பு வந்து ஆரி இவ்வாறு செய்வது நியாயமானது தானா என கூறும் பாலா சரி இனி கோபப்பட மாட்டேன் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal