ட்ரோன் விதிகள் 2021 இன் கீழ்,புதிய ட்ரோன் கொள்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் ட்ரோன்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது.பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுகின்றன.இதனால்,சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.
இந்த புதிய விதிகள்,நடப்பு ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஆளில்லாத விமான விதிகள் 2021-க்கு மாற்றாக வெளியிடப்பட்டது. இந்த புதிய ட்ரோன் விதிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில்,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய ட்ரோன் கொள்கையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ட்ரோன் விதிகள் 2021 இன் கீழ்,
பிரதமர் மோடி :
இந்த புதிய ட்ரோன் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
“புதிய ட்ரோன் விதிகள் ஸ்டார்ட் அப்களுக்கும் இந்த துறையில் வேலை செய்யும் நமது இளைஞர்களுக்கும் பெரிதும் உதவும். இது புதுமை மற்றும் வணிகத்திற்கான புதிய சாத்தியங்களைத் திறக்கும். இந்தியாவை ட்ரோன் மையமாக மாற்ற புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் இந்தியாவின் பலத்தை மேம்படுத்த இது உதவும்.
புதிய ட்ரோன் விதிகள் இந்தியாவில் இந்தத் துறைக்கு ஒரு முக்கிய தருணத்தைத் தொடங்குகின்றன. விதிகள் நம்பிக்கை மற்றும் சுய சான்றிதழ் அடிப்படையிலானது. ஒப்புதல்கள், இணக்கத் தேவைகள் மற்றும் நுழைவு தடைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன”,என்று தெரிவித்துள்ளார்.
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…
ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…