பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? – பேரவையில் அறிவிப்பு

மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தகவல்.

தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் & மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார். அதில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலை எனும் தீய பழக்கத்தை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. 2031ம் ஆண்டில் மாநிலத்திலுள்ள மூத்த குடிமக்களின் விழுக்காடு 18.20% ஆக உயரும்போது எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதாவது, குழந்தைகளுக்கான உதவி எண் – 1098, மகளிருக்கான உதவி எண் – 181, முதியோருக்கான உதவி எண் – 14567, இணையதள குற்றத் தடுப்புக்கான உதவி எண் – 1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்