#BreakingNews: வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிமன்றம் செல்வேன் – டிரம்ப் அறிவிப்பு

அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று டொனால்ட் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ,டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி .பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம் .தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன.ஜோ பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது.எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்.அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.