வாராக்கடன் பிரச்சனை: ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாராக்கடன் பிரச்சனை: ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் என நிதியமைச்சர் தகவல்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ரூ.30,600 கோடி உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடன்களுக்கான ஒப்புதல் மதிப்பில் 15 சதவிகிதம் வரை என்ஏஆர்சிஎல் பணம் செலுத்தும், மீதமுள்ள 85 சதவிகிதம் அரசு உத்தரவாத பாதுகாப்பு ரசீதுகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube