9 வாரம் இந்த மாலையை விநாயகருக்கு அணிந்து உங்கள் வேண்டுதலை வைத்தால், வேண்டியது நிறைவேறும்..!

9 வாரம் இந்த மாலையை விநாயகருக்கு அணிந்து உங்கள் வேண்டுதலை வைத்தால், வேண்டியது நிறைவேறும்..!

விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும்.

விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை சுருக்கி ஒரு வரியில் பேனாவால் இலை கிழியாமல் எழுதி கொள்ள வேண்டும்.  உதாரணமாக, பணவரவு அதிகரிக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணம் நடைபெற, நல்ல உத்தியோகம் கிடைக்க, ஆரோக்கியம் பெற என அந்த இலையில் எழுதி கொள்ளுங்கள்.

இந்த இலையை சுருட்டி சிவப்பு நிற நூல் கொண்டு மாலை கட்டி கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமையில் காலை 6 மணிக்கு இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். அன்று சுத்தபத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, உங்கள் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்திற்கு செம்பருத்தி இலை மாலையை அணிவித்து விநாயகர் முன்னால் தீபம் ஏற்றி மனதார உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். எந்த வேண்டுதலை நீங்கள் இலையில் எழுதி வைத்து பிள்ளையாருக்கு அணிவித்தீர்களோ அதனை நன்கு வேண்டி கொள்ளுங்கள். இதேபோன்று ஒன்பது வாரமும் பிள்ளையாருக்கு செம்பருத்தி இலையில் மாலையை அணிவித்து வேண்டுதலை வைக்க வேண்டும். ஒன்பது வாரமும் ஒரே வேண்டுதலை செம்பருத்தி இலையில் எழுதி சாமியிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

ஒன்பதாவது வார இறுதியில் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடி வந்ததை நீங்களே காண்பீர்கள். நம்பிக்கையோடு இந்த வேண்டுதலை செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் விநாயகர் சிலை இருந்தால் அந்த சிலைக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபடலாம். மேலும், பிள்ளையார் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து இந்த வேண்டுதலை நீங்கள் துவங்குவது சிறப்பு  தரும். வீட்டிற்கு அருகில் அரசமரத்தடி பிள்ளையார் இருந்தால் அங்கே சென்று செம்பருத்தி இலை மாலை அணிவித்து வேண்டினாலும் நீங்கள் வேண்டியது நிறைவேறும். செம்பருத்தி இலை செவ்வாய்க்கிழமை தேவைப்படுவதால் திங்கள் கிழமை அன்றே பறித்து வைத்து கொள்ளலாம். அதேபோல் சாமிக்கு மாலை அணிவித்த பிறகு மறுநாள் புதன்கிழமை காலையில் யாரும் கால் படாத இடத்தில், செடி, கொடிகளில் இந்த மாலையை போட்டு விடலாம்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *