கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!
கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வைஷாலி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார்.
இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் வைஷாலி படைத்துள்ளார்.
இவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது..
ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!
Read More