வாழைப்பூ சட்னியை இப்படி செஞ்சா 10 இட்லி கூட சாப்பிடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

Lifestyle

வாழைப்பூவை வைத்து பொரியல், குழம்பு, வடை செய்திருப்போம், அந்த வகையில் வாழைப்பூவை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்..

மல்லி - 2 ஸ்பூன் சீரகம் - 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் -  5 உளுந்து - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 15 புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய்- 4 ஸ்பூன் வாழைப்பூ- ஒரு பூ வீதம்

தேவையான பொருட்கள்:

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

செய்முறை:

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து ,கடலைப்பருப்பு சிவந்ததும் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் வாழைப்பூவை வதக்கவும் வாழைப்பூ அரை பதத்தில் வெந்தவுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியவுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு ஆற வைத்து அரைத்து எடுக்கவும் .

இப்போது சத்தான வாழைப்பூ சட்னி ரெடி இதை இட்லி தோசை அனைத்து விதமான சாத வகைகளுக்கும் சுவையாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் கருப்பையை வலுப்படுத்தும்

பயன்கள்:

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களை கரைக்கும் தன்மை இந்த வாழ பூவிற்கும், வாழைத் தண்டிற்கும் உள்ளது.

வாழைப்பூ ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கிறது. மேலும் வாய்ப்புண்  மற்றும் வாய் துர்நாற்றத்தையும் இது போக்க  கூடியதாக உள்ளது.

பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…