ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!

இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் முதல் போட்டி நாளை ஜனவரி 10-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  

விராட் கோலி கடைசியாக கடந்த 2022 -ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக விளையாடினார்.

அதன்பிறகு நடைபெற்ற எந்த டி20 போட்டிகளிலும் கோலியும் விளையாடவில்லை ரோஹித் ஷர்மாவும் விளையாடவில்லை.

பிறகு இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

எனவே, விராட் கோலி ரசிகர்கள் பலரும் விராட் கோலி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்.

இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி அடுத்ததாக 14-ஆம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!