Cinema

3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி வந்த சமயத்தில் உலகம் முழுவதும் பல மக்களால் ரசிக்கப்பட்டது என்றே கூறலாம்.

தெருக்குறள் அறிவு எழுதி பாடகி தீ உடன் இணைந்து பாடி இருந்தார். அதனை போல ஆல்பம் பாடலிலும் இருவரும் பாடி கொண்டு ஆடிய காட்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குற்றம் சாட்டி வீடியோவில், என்ஜாய் எஞ்சாமி"பாடல் வெளியாகி 3 வருடங்கள் ஆகி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோடிக்கணக்கான பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இந்த பாடலில் இசையமைத்த எனக்கு 3வருடங்கள் ஆகியும் ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை.

இந்த அனுபவத்தால் நான் என்னுடைய சொந்த ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.  தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை.

இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சித்தோம்.

இந்த விவகாரம் குறித்து இதுதான் என்னுடைய முதல் பதிவு. இந்தியக் கலைஞர்களே வருத்தப்படாதீர்கள், உங்கள் நிலுவைத் தொகை சரி செய்யப்படும்.

இந்தியக் கலைஞர்கள் அவர்களது திறமையைக் காட்ட, வருமானத்தைப் பெற வெளிப்படையான மென்மையான தளத்தைப் பெற வேண்டுமென விரும்புகிறேன்” எனவும் கூறியுள்ளார்.

முடியல! அஜய் கோஷ் வாழ்வில் இவ்வளவு கஷ்டமா? கண்கலங்க வைத்த சோக கதை!