கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல் …

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக 9ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Comment