இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்…பாக்.பிரதமர் திமிர் பேச்சு…!!

இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்…பாக்.பிரதமர் திமிர் பேச்சு…!!

  • புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார் .
  • பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் யோசித்துக்கொண்டு இருக்காமல் தக்க பதிலடி கொடுக்கப்படும். 

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிக்கையில் , இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் எந்த ஆதார ஆவணங்களும் இல்லாமல்  புல்வாமா தாக்குதலுக்கு  பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற ஆதாரம் வழங்கினால்  தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் யோசித்துக் கொண்டு இருக்காமல்  உடனடியாக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *