சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்கார் படத்தின் ஹெச்டி பிரிண்டை வெகு விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் மற்றும் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்காருக்கு நேரடியாக சவால் விடுத்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம்.அதேபோல் ஒவ்வொரு திரையரங்கிலும், ஒருவரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருக்கிறோம்.யாரேனும், செல்போனிலோ, கேமரா மூலமாகவோ படத்தை பதிவு செய்தால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.