கூட்டணி தர்மத்தின்படி அனைவரையும் சந்தித்துள்ளோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

கூட்டணி தர்மத்தின்படி அனைவரையும் சந்தித்துள்ளோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக அதிமுக இருப்பதால் யார் போட்டியிடுவார்கள் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது. இன்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம். எங்கள் கூட்டணி தர்மத்தின்படி எல்லோரையும் சந்தித்துள்ளோம். அவர்கள் விரைந்து நல்ல முடிவு எடுப்பார்கள் என நினைக்கிறோம். என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *