அறிக்கையில் வாபஸ் பெற வலியுறுத்துவோம் – சிடி ரவி., இதுதான் எங்கள் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என சிடி ரவி தெரிவித்த கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, குடியுரிமை சட்டம் குறித்து அதிமுக குழப்பத்தில் உள்ளது. ஆகையால், நாங்கள் குடியுரிமை சட்டத்தின் சிறப்பு குறித்து அதிமுகவினருக்கு விளக்கி சொல்லி, அறிக்கையில் இருந்து வாபஸ் பெற வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய மீன்வளத்துத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அறிக்கையை பொறுத்தளவில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, குடியுரிமை சட்டம் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் தேவையில்லை என்றதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதை தேர்தல் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அந்த ஒருமித்த நிலைப்பாட்டை தான் மீண்டும் அதிமுக அரசு அமையும் போது, நிச்சயமாக குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி அவருடைய கருத்தை சொல்லிவுள்ளார். எங்களின் கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என எதிர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்