டிக்டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது புகார்.!

நாம் தமிழர் கட்சி  மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றுள்ளார். அங்குள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் உள்ள  நினைவு தூண் அருகே நின்று  டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டது.இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரில் நாம் தமிழர் கட்சி  மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

author avatar
murugan