தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை தாமதம் இன்றி செய்ய வேண்டும். மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment