மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மகன் திருமணத்தை ஒத்திவைத்த போலீஸ் அதிகாரி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் ஒருபக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள் மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரிகளும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் டெல்லியை சேர்ந்த போலீஸ் ஏ.எஸ்.ஐ. ராகேஷ் குமார் அவர்கள், டெல்லியில், லோதி சாலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நன் இதுவரை கிட்டத்தட்ட 1,100 பேருக்கு உதவி செய்துள்ளேன். இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். இங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, எனது மகளின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…