பெட்ரோல், டீசல் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் – டிடிவி தினகரன்..!

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும். 

நாடு முழுவதும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளதால் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகள் விலையைஉயர்த்தி வருகின்றன.

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 பாயைத் தாண்டியுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைப்பதாக கூறியதை நிறைவேற்ற வேண்டும்  சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  ‘பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்’ என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan