வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறி நிலையில்,இன்று நடந்த விசாரணையில் 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா..? என மீண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசின் கேட்டு செல்லுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு , உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா..? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் கூறியது. வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை, புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.
King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர்…
IPL 2024 : நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் 4-வது போட்டியாக வருகிற ஞாற்றுகிழமை மதியம் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியும், லக்னோவ் அணியும் மோதவுள்ளது. இந்த…
PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு…
Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு…
குழந்தையின்மை -தற்போதைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக அதிக பிரச்சனைகளில் குழந்தையின்மையும் ஒன்று.சில குடும்பத்தில் பிரச்சனைகள் இதை முதற்காரணமாக கொண்டு ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் மன…
Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.…