முதலமைச்சர் ,துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.இதனையடுத்து, 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,  அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு  விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் சாதகமான பதில் வரும்.சாதகமான பதில் வந்ததும் 50 வயதுக்கு மேற்பட்டோர்,பத்திரிக்கையாளர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.