நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேறிய நிலையில், பெங்களூர் ரசிகர்கள் அனைவரும் சற்று சோகத்தில் இருக்கிறார்கள். கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் பெங்களூர் அணி இருந்தது.
குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதமும் கூட விளாசினார். ஆனால், அதே போலவே குஜராத் அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் பெங்களுர் அணி தோல்வி பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில், தற்போது விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை செய்துள்ளார்.
A season which had it’s moments but unfortunately we fell short of the goal. Disappointed but we must hold our heads high. To our loyal supporters, grateful for backing us every step of the way. pic.twitter.com/82O4WHJbbn
— Virat Kohli (@imVkohli) May 23, 2023
அதில் அவர் கூறியதாவது ” இந்த ஐபிஎல் சீசன் சில தருணங்களைக் கொண்ட ஒரு சீசன் ஆக அமைந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களுடைய இலக்கை அடையவில்லை என்பது மிகவும் ஏமாற்றம் தான். ஆனால், எங்கள் விசுவாசமான ரசிகர்களுக்கு எங்களை ஆதரித்ததற்கு நன்றி. பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் எனது அணியினருக்கு நன்றி. நாங்கள் வலுவாக திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.