நாசாவுக்கு முன்பே கண்டுபிடித்தது நாங்கள்தான்-இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி செய்யப்பட்டது . ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது .

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம்  அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது.சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது.இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது. இதுகுறித்து இஸ்ரோ இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.