தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது.
மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேர்காணலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இருக்கைகளை கூட தாண்டி இருக்காது. தேர்தல் ஆணையம் இந்த முறை நடந்து கொண்ட விதம் கொடூரமானது.
இருந்தாலும், தேர்தலில் மம்தாவின் கட்சி இரட்டை சதத்தை தாண்டி வெற்றி பெற்றதற்கு குறித்து கேட்டபோது, நான் தெரு போராளி. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இரட்டை சதம் அடிப்போம் என்றும், பாஜக எழுபதை தாண்டாது என்றும் சொன்னேன் மேலும், தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது என கூறியுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தாவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அங்கு வாக்கு எண்ணிக்கையையில் குளறுபடி நடந்துள்ளதால் தான் நாங்கள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு பரிசீலனை செய்துள்ளோம். ஆனால், அங்கு தோல்வி அடைந்தது குறித்து நான் வருத்தப்படவில்லை. நாங்கள் அதிகமான இடங்களை பெற்று தான் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சில இடங்களில், வாக்கு இயந்திரங்களில் கோளாறு மற்றும் பல அஞ்சல் வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வங்காள மக்களுக்கு தங்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் வங்காளத்தை மட்டுமல்ல, நாட்டையும் காப்பாற்றியுள்ளனர் என்றும், நாங்கள் தெரு போராளிகள் என்பதால்தான், எங்கள் கட்சி வென்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் கொரோனவை எவ்வாறு கையாள போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மத்திய அரசு அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்றும், சுகாதார நெருக்கடி காரணமாக எந்த ஒரு வெற்றிகரமான ஊர்வலங்களையும் எடுக்க வேண்டாம் என்றும் தங்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…