எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம்..அது நடக்கவில்லை-பாரதிராஜா பேட்டி..!

சற்று நேரத்திற்கு முன் மருத்துவமனையில் உள்ள பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனை பார்த்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா ,  துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச வார்த்தை வராது, எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம் இன்னும் சில நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.

மேலும், எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லோருடைய முடிவும் அதன் கையில் தான் இருக்கிறது  என  இயக்குனர் பாரதிராஜா  தெரிவித்தார்.

தமிழ் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியன் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது எஸ்.பி.பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.

author avatar
murugan