எச்சரிக்கை : புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் – நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் நடமாடும் காட்டுப்புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டு புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் இது குறித்து கூறுகையில் புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், தேவையான உணவை வீடுகளுக்கு கொண்டு வந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புலி பிடிபடும் வரையில், பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.