நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ‘வார்’ மூலம் களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்!

பாலிவுட் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான சூப்பர் 30 திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகளின் நன்மதிப்பைப் பெற்று கேளிக்கை வரிவிலக்கும் பெற்றது. இந்த படத்தை அடுத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களம் நிறைந்த ஒரு படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்து உள்ளார்.

இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்னொரு பாலிவுட் முன்னணி நடிகரான டைகர் ஷெராப் இப்படத்தில் ஹிர்த்திக் ரோஷனுக்கு எதிர் வேடத்தில் நடித்துள்ளார். வாணி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படம் டப் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாக உள்ளது. டப் செய்யப்பட்ட தமிழ் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக ட்ரெய்லர் அமைந்துள்ளது. ட்ரைலர் முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பட பாணி ஆக்சன் காட்சிகள் போல இடம் பெற்றிருந்தது.தற்போது வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாக பரவி வருகிறது. இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.