ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்பார்கள்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்பார்கள்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ, தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற  நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பழிவாங்கவே ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.

தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் பணி செய்து வருகின்றனர். அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.   தற்போது உள்ள இரட்டை தலைமையால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பம் இல்லை என தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube