இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது.

உலகையே கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோயின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இயற்கை பேரழிவுகள் ஒருபக்கம் மனித உயிர்களை வாரிக் கொள்கிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபாங் என்ற எரிமலை வெடித்து சிதறியதால், சாம்பலை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த மலையை சுற்றிலும், 20 கி.மீ தொலைவிற்கு சாம்பலும், கரும்புகையும் சூழ்ந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube