பார்வையாளர்களுக்கு தடை – நாடாளுமன்ற மக்களவை செயலாளர் அறிவிப்பு.!

வருகிற 11ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் சினேலதா ஸ்ரீவாஸ்தவா அறிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2ம் தேதி கூடிய நாடாளுமன்றம், எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் முடங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை வரும் 11ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்