சீருடையில் மது அருந்திய விருதுநகர் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்!

சீருடையில் மது அருந்திய விருதுநகர் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்!

விருதுநகர் மாவட்டத்தில் சீருடை மற்றும் வாக்கிடாக்கியுடன் டாஸ்மாக் கடையில், மது அருந்திய சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரன் பணி நீக்கம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றும் கோடீஸ்வரன் என்பவர் சீருடை அணிந்தவாரே மது அருந்தியுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்திய சிறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று சீருடையில் இருந்ததோடு வாக்கி டாக்கியை கையில் வைத்துக் கொண்டு மது அருந்தியுள்ளார்.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றதை அடுத்து சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube