விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

விழுப்புரம் மாவட்டம்  கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ். கள்ளக்குறிச்சியில் இருந்து தென்கீரனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, அண்ணாநகர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களைச் சேகரித்து வரும் போலீசார், அவரது கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
source: dinasuvadu.com

Leave a Comment