விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு 14-ஆக உயர்வு!

விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு 14-ஆக உயர்வு!

Death

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயன், மலர்விழி, சுரேஷ், சங்கர், கேசவவேலு, விஜயன், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், ராஜமூர்த்தி, சங்கர், மண்ணாங்கட்டி, ஆபிரகாம் மற்றும் சரத்குமார் ஆகியோரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்க்குப்பதில் கள்ளச்சாராயம் குடித்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4943 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தகவல் தெரிவித்திருந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube