உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வந்ததால் கிராமவாசிகள் பலரும் ஓடும் சராயு நதியில் குதித்து தப்பியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4000 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தி வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வண்ணம் பல விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட் தலைமையில் மருத்துவக்குழு ஒன்று உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை கண்டவுடன் அப்பகுதி மக்கள் ஓட்டமெடுத்து அங்கு ஓடும் சராயு நதியில் குதித்துள்ளனர். இது கொரோனா தடுப்பூசி இல்லை, இது ஒரு விஷ ஊசி என்பது போல் அங்கு வதந்தி பரவியதே இதற்கு காரணம். மேலும், அக்கிராமத்தில் 14 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் மற்றவர்கள் இதிலிருந்து தப்பி ஓடியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…