ராவணனை தொடர்ந்து மீண்டும் இணையும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்.!

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது.

தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்து படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படப்பிடிப்பில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரம் மற்றும் மந்தாகினி, நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரின் காட்சிகள் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவருமே மணிரத்னம் இயக்கத்தில் 2010ல்  உருவாகிய ராவணன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.