குழந்தையை தாயிடம் சேர்க்க அரசு உதவ வேண்டும்! மக்கள் செல்வன் உருக்கம்!!

சென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார்.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியது.

இதுபற்றி கருத்து கூறிய சேதுபதி, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு இன்னும் குழந்தைதான். ஆதலால் அந்த குழந்தையை தாயிடம் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment