விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை   

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை   வெளியிட்டுள்ளது.

கடந்த 22-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் , தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ,நோய்த்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துமனையில் இன்று (செப்டம்பர் 29ஆம் தேதி ) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை சீராக உள்ளது.பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்கு பின் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.  விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது . விஜய்காந்த்க்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.