எனது கடனை முழுமையாக திருப்பி செலுத்த நான் தயார்! விஜய் மல்லையா அதிரடிட்வீட்!

இந்திய வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு தப்பி சென்றுவிட்டார். இது தொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

மேலும் இங்கிலாந்தில் இருந்து விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்திலும் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில்  தொழிலில் தோல்வி அடைந்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். பண மோசடி விவகாரத்தில் கவுரவமாக வெளியேறவோ அல்லது சிக்கல்களை தீர்க்க வாய்ப்பு தரவேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.