பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திலுள்ள ‘கண்ணான கண்ணே கலங்காதடி’ பாடலை வெளியிட்டது மிகவும் வைரலாகி வருகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்கள் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்திலிருந்து ‘கண்ணான கண்ணே’ பாடலுடன் கூடிய ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவர் ஒரு படத்திற்காக இடம் பார்க்க சென்ற போது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஷூட் செய்ததாகவும், தற்போது அதனை எடிட் செய்து தந்ததாகவும் கூறியுள்ளார். வழக்கமாக தனது காதலியை மறைமுகமாக குறிக்கும் விக்னேஷ் சிவன் இந்த பாடல் வரிகள் மூலம் எதையாவது சொல்ல நினைக்கிறீர்களா என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல ரண்டு காதல்’ என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…