சென்னைக்கு வருகை புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார்.

சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.  இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவிலும் பங்குகொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெற்ற பிறகு தமிழகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளார்.