மீண்டும் வந்து சுட்டுத்தள்ள தயாராகும் சிம்பு.! வெந்து தணிந்தது காடு புதிய அப்டேட்.!

சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதற்கான ஒரு போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இத்தனை வருடம் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த சிம்புவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு முதலமைச்சரை கொள்வது போல காட்டப்பட்டிருக்கும். அதனை வில்லன் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில் வந்தான் சுட்டான் செத்தான் ரிபீட்டு என பன்ச் பேசுவார்.

மேற்கண்ட இந்த வசனம் மிகவும் பிரபலம். தற்போது, சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் திருச்செந்தூர் மற்றும் மும்பை பகுதிகளில் நடைபெற்றது.

இதனை அடுத்து, தற்போது சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. மாநாடு வெற்றிவிழா அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சிம்பு.

அதற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.எ அதில், சிம்பு துப்பாக்கியுடன் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு மீண்டும் சுட்டு தள்ள வந்துவிட்டார் சிம்பு என இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.