வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் -தமிழக அரசு .!

வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் -தமிழக அரசு .!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.

திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. மேலும், எஸ்.பி வேலுமணி எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் விசாரணை நடத்தப்படும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசுதெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை ஆகஸ்ட் 2-ம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube