நாளை வேலூருக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது

நாடுமுழுவதும் நடந்த  மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக  கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .

பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.

வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.