வேலூர் மக்களவை தேர்தல் :ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

வேலூர் மக்களவை தேர்தல் :ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்தநிலையில்  ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அவர் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Join our channel google news Youtube